Tuesday, October 7, 2008

லக்கி ஸ்டார்

எனக்கு இதுதான் முதல் முறை(பதிவு எழுவது)..... ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.....

எத்தனையோ முறை நானும் பதிவு எழுத வேண்டுமென்று நினைத்ததுண்டு .,மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் பதிவாக்கலாம் என்று நினைத்ததுண்டு . தினமும் தமிழ் மனம், தேன்கூடு(இப்போது வருவதில்லை ஏன்?),தமிழிஷ்..... படித்து லயித்ததுண்டு. சிலரது பதிவுகள் படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும்,பல சமயங்களில் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் குஜால் பதிவர்கள் - மற்றும் அவர்களின் பதிவு எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் எள்ளளவு கூட சுயபுத்தி இல்லாமல் ஆஹா,ஓஹோவென புகழும் வில்லுபாட்டு மஜா பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது மனம் குஜாலகிவிடும்.(நாம் எழுதினால் இதை விட நன்றாக எழுதலாம் என்பதால்) அதனால்தான் இப்போது எழுதிக்கொண்டு இருக்கிறேன் ..............................................................................................................................................
.............................................................................................................................................................................
...........................................................................................................................................................................
...........................................................................................................................................................................
.............................................................................................................................................................................
...........................................................................................................................................................................
...........................................................................................................................................................................
...............................................................................................................................................................................
............................................................................................................................................................................
..............................................................................................................................................................................
..........................................................................................................................................................................
  • உண்மை சுடும்:

Tuesday, May 6, 2008

சிறந்த ஊத்தல்கள்(சினிமா)

தமிழில் இப்போது வரும் படங்களைப் பார்க்கும்போது சில உண்மைகள் புரிகிறது.சில படங்கள் ஏன் ஓடுகிறது ,சில படங்கள் ஏன் ஓடவில்லை(ஒடவிடுவதில்லை) என்பது புரியவில்லை.எதனால் இப்படி?
  • 1.தொலைக்காட்சி உரிமை வரப்போகும் படங்களின் உரிமையை போட்டி போட்டு வாங்கும் சேனல்கள் அப்படம் "டப்பா"படமானாலும் டாப் டென்னில் முன்னிலைப்படுத்துவது,மற்ற படங்களை மட்டம் தட்டுவது
  • (எ.கா.)தெனாலி,மின்னலே போன்ற படங்கள் ஹிட் ஆனாலும் முக்கிய சேனல் இருட்டிப்பு செய்தது.அதையும் மீறித்தான் அவை ஹிட் ஆனது
  • விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் (விதிவிலக்கு - வசிகரா,சச்சின்),சிம்பு படங்கள் எப்படி இருந்தாலும் மேலே தூக்கி விட தவறவில்லை
  • இதில் பாவப்பட்டது கமல் & அஜித் மட்டுமே,இவர்களுக்கு எப்போதாவது ஒரு படம் ஹிட் ஆகும் ஆனால் அதுவும் இந்த சேனல் போட்டியில் சிக்கி விடும்
  • 2. நடிகர்களின் மூடநம்பிக்கை ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆனால் அதன் பிறகு அதே போல் பல படங்கள் வந்துவிடும்.(உதாரணம்)காதல் கோட்டை ,பூவே உனக்காக காலத்தில் அதே போன்று பல படங்கள் வந்தன ஆனால் வென்றவை ?
  • திருப்பாச்சி,சிவகாசி வெற்றியை பார்த்து திருப்பதி நடித்தார் அஜித்,மொட்டை போடததுதான் பாக்கி.விஜய் ஆதி எடுத்தார்,மீதி நடந்தது எல்லோருக்கும் தெரியும்.
  • (மீண்டும் வருவேன்...)

இன்றைய செய்தி

அட்சய திரிதியை நாளை மறுநாள் நிகழ்வதாக குறிப்பிடுகிறார்கள் ,ஆனால் நாளை (மே ஏலு) மதியத்திற்கு பின் நல்ல நேரம் என்று தினமலர் நாளிதழ் சொல்கிறது ,எனவே மக்களே நாளை நிறைய நகைகளை வாங்கி (எவ்வளவு விலை இருந்தாலும் பரவாயில்லை) அணியுங்கள்.
அடுத்த வருடம் இதே நாளில் செல்வம் செழிக்கும் - உங்களுக்கு இல்லை அந்த நகை கடைக்கு.